search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப் இன்ஸ்பெக்டர்"

    • 2 கார்களில் பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் சிவசங்கரன் காரை வழிமறித்தனர்.
    • பலத்த காயமடைந்த சிவசங்கரன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    போரூர்:

    சென்னை நுங்கம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 31). சப் - இன்ஸ்பெக்டரான இவர் மாதவரம் போலீஸ் நிலைய சட்டம்-ஒழுங்கு பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.

    சிவசங்கரன் நேற்று இரவு தனது நண்பர்களுடன் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கிளப் ஒன்றிற்கு சென்றார். பின்னர் மது அருந்திவிட்டு பணம் கட்ட சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் "எனது பில்லுக்கும் சேர்த்து பணத்தை கட்டு" என்று சிவசங்கரனிடம் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் சிவசங்கரன் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அப்போது அவரை 2 கார்களில் பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் சிவசங்கரன் காரை வழிமறித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கிய சிவசங்கரனை சரமாரியாக தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் பலத்த காயமடைந்த சிவசங்கரன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தப்பி சென்ற கும்பலை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சுபானி மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து கருவை சிதைக்க முயன்றார்.
    • காதல் மனைவி என்ற ஈவு இரக்கம் பார்க்காமல் லட்சுமி பிரசன்னாவின் தலைமுடியைப் பிடித்து சுவற்றில் தலையை மோதியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    திருமலை:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், போனகே பள்ளியை சேர்ந்தவர் சுபானி. இவர் நெல்லூர் டவுன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.

    அதே போலீஸ் நிலையத்தில் நெல்லூர் அடுத்த பித்ர குண்டவை சேர்ந்த லட்சுமி பிரசன்னா பெண் போலீசாக வேலை செய்து வருகிறார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுபானி லட்சுமி பிரசன்னாவை காதலிப்பதாகவும், நீ இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது என ஆசைவார்த்தை கூறி மயக்கினார். இதை உண்மை என நம்பிய லட்சுமி பிரசன்னாவும் அவரை காதலிக்க தொடங்கினார்.

    இதையடுத்து இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2 மாதங்கள் இன்பமாக ஓடிய தாம்பத்திய வாழ்க்கை அதன் பிறகு காதல் கசக்க ஆரம்பித்ததால் லட்சுமி பிரசன்னாவை சுபானி அடித்து துன்புறுத்த தொடங்கினார்.

    சில மாதங்களில் கணவர் திருந்தி விடுவார் என எண்ணி அவரது கொடுமைகளை தாங்கிக் கொண்டு லட்சுமி பிரசன்னா அவருடன் குடும்பம் நடத்தினார்.

    இந்த நிலையில் லட்சுமி பிரசன்னா கர்ப்பமானார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுபானி மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து கருவை சிதைக்க முயன்றார். மேலும் காதல் மனைவி என்ற ஈவு இரக்கம் பார்க்காமல் லட்சுமி பிரசன்னாவின் தலைமுடியைப் பிடித்து சுவற்றில் தலையை மோதியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து லட்சுமி பிரசன்னா அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் பிறகு இது குறித்து நெல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் லட்சுமி பிரசன்னாவை அலை கழித்தனர்.

    இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் நெல்லூர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுபானியை தேடி வருகின்றனர்.

    • பி.எட். படித்து வந்த கொழுந்தியாளியிடம், மதுரையில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்தார்.
    • கடத்தல் வழக்கு சம்பந்தமாக வெங்கடாசலத்தை பணி நீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    கோவை:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 35). இவரது மனைவி சத்யா (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையம் மதுவிலக்கு பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு மனைவியின் தங்கையை திருமணம் முடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எப்படியாவது இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு வகையில் திட்டமிட்டார்.

    பி.எட். படித்து வந்த கொழுந்தியாளியிடம், மதுரையில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்தார். தொடர்ந்து வெங்கடாசலம் மனைவி சத்யா மற்றும் கொழுந்தியாளுடன் காரில் மதுரைக்கு சென்றார்.

    மதுரைக்கு முன்புள்ள போலீஸ் சோதனைச்சாவடியில், சத்யாவை கீழே இறக்கி விட்டார். பின்னர் வெங்கடாசலம் கொழுந்தியாளை மட்டும் கடத்திக் கொண்டு மதுரைக்கு சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா, இதுகுறித்து சோதனைச்சாவடியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் வெங்கடாசலத்தை மதுரைக்கு செல்லும் வழியில் மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து கடத்தல் உள்பட 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இதைதொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த வெங்கடாசலம் மீண்டும் பணியில் சேர்ந்தார். பின்னர் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடத்தல் வழக்கு சம்பந்தமாக வெங்கடாசலத்தை பணி நீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார். காவல் அதிகாரியாக இருந்து கொண்டு ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    ×